நேருக்கு நேர் மோதிய 2 டூவீலர்... சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்... கூவத்தூர் அருகே பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


கூவத்தூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (45). இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கூவத்தூர் அருகே பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே பெருங்குடியை சேர்ந்த ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சையது இப்ராகிம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சையது இப்ராகிம் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த ராகுல் நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 killed in twowheelers accident in koovathur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->