மனைவியுடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகள் கழுத்தை நெறித்து கொலை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகள் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ்-சரிதா. காதல் திருமணம் செய்த இந்த தம்பதியினர் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்த நிலையில், தற்போது சொந்த ஊரான எடுத்தவாய்நத்தத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது மனைவியை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மனைவியின் வீட்டில் விட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சுரேஷ் பள்ளியில் படித்து வந்த பெர்லின் சஞ்சீவ் (வயது 9), சஞ்சீவ் (வயது 6) ஆகிய இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் செங்கல்பட்டிற்கு சென்று அங்கு அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 child killed father in kallakkurichchi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->