திருப்பூரில் 15 வயது சிறுமி கர்ப்பம் - சென்னை வாலிபருக்கு போலீசார் வலை வீச்சு.!!
15 years old girl pregnent in tirupur police investigation
சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபருக்கு திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமிக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார்.

உடனே சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
15 years old girl pregnent in tirupur police investigation