தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத்த தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பருத்தித்துறை அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 23 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 tamilnadu fishermans arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->