நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம், பள்ளி வாகனம் மோதி 11ம் வகுப்பு மாணவன் பலி..! - Seithipunal
Seithipunal


பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 11ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், மேலகலனியை சேர்ந்தவர்  புஷ்பராஜ். இவர் கே.ஆர்.கே நகரில் உள்ள பள்ளியில்  11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதன்று இவரது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி பேருந்துநிலையம் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த புஷ்பராஜ் மீது பின்னால் வந்த பள்ளி வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11th Student Death in Accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->