#சென்னை || 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் - 61 வயது முதியவருக்கு 10ஆண்டு சிறை - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறு வயது சிறுமி. இவருக்கு 61 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முதியவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 years in prison for a Oldman who sexually harassing a 6 year old girl in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->