அதன் வலியை நான் உணர்வேன்! கடினமான மனதோடு யுவராஜ் சிங் ட்வீட்! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் 60 வயதான பிரபல பாலிவுட் இந்தி நடிகர் சஞ்சய் தத் -க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டவே, மும்பை லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஆர்.டி., பி.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்தனர். 

இதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், சஞ்சய் தத்துக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் அந்த பதிவில், ‘‘அதன் காரணமாக ஏற்படும் வலியை நான் அறிவேன். நீங்கள் ஒரு போராளி, நீங்கள் வலிமையானவர். இந்த கடினமான கட்டத்தை கடப்பதை பார்ப்பேன். நீங்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்து தெரிவிக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு 2013-ல் இருந்து 2019 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yuvraj singh tweet for sanjay dutt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->