WBC Boxing Cup :பதக்கப் புயலை கிளப்பும் இந்தியா...! ஆறு வீரர்கள் இறுதி சுற்றை எட்டிய அதிரடி நாள்
WBC Boxing Cup India creates storm medal An action packed day six fighters reachfinal round
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை 2024-ன் 3-வது மற்றும் இறுதி லீக் சுற்று பரபரப்பை கிளப்பி வருகிறது. நேற்று பெண்கள் 70 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் அதிரடி வீராங்கனை அருந்ததி சவுத்ரி உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்கள் வென்ற அனுபவசாலி ஜெர்மனியின் லியோனி முல்லர்-ஐ எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அருந்ததி கொடுத்த மின்னல் வேக குத்து மழைக்கு லியோனி திணறினார். ரிங்கில் நிலை தடுமாறிய ஜெர்மன் வீராங்கனைக்கு தப்பிப்பதற்கான வழியே காணாமற் போனது. அபாயத்தை உணர்ந்த நடுவர், போட்டியை நடுப்பாதியில் நிறுத்தி, அருந்ததியை நியாயமாக வெற்றியாளராக அறிவித்தார்.

இதுடன், 23 வயதான அருந்ததி சவுத்ரி நேராக இறுதிப்போட்டிக்குள் பாய்ந்துள்ளார், மேலும் குறைந்தது வெள்ளி, அதிகபட்சம் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு உறுதி.அதே சமயம், இந்தியாவின் பெருமைபோன்ற உலக சாம்பியன் மீனாட்சி, 48 கிலோ எடைப்பிரிவில் தென்கொரியாவின் பேக் சோரோங்-ஐ 5-0 என்ற ஒரேகால் புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதுடன் மட்டுமல்ல…இந்தியா முழுவதும் பதக்க நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், அங்குஷ் பன்ஹால் (80 கிலோ), நுபுர் (80+ கிலோ), பர்வீன் ஹூடா (60 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), அபினாஷ் (65 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவுகளில் இறுதி சுற்றை அடைந்து, இந்தியாவை பதக்க மழைக்குத் தயார் செய்து வைத்துள்ளனர்.
English Summary
WBC Boxing Cup India creates storm medal An action packed day six fighters reachfinal round