3வது நாளாக டெஸ்ட் போட்டியில் தாமதம்!...சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.

வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்,  35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று  2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில், நேற்று  காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்ததால் 2வது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக இன்று 3 வது நாளில் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Test match delayed for 3rd day cricket fans in grief


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->