3வது டெஸ்ட் போட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.! இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வென்று, 1 - 1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. 

இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கேப்டவுனில் இந்திய அணி வென்றதில்லை. மேலும், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது இல்லை. ஆகவே மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்.

 

அதேசமயம் கேப்டவுனை தனது கோட்டையாக தென்னாபிரிக்க அணி மாற்றி வைத்துள்ளது. இந்த மைதானத்தில் பல ஜாம்பவான் அணிகளை, தென்ஆப்பிரிக்கா அணி மண்ணை கவ்வ வைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும், 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், இன்று தொடங்கும் போட்டியில் இந்திய அணி வென்றால், மிகப் பெரிய வரலாறு படைக்கும். மேலும், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SA vs IND 3rd test match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->