டி20 போட்டியில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் நடப்பு சீசனில் 23-வது லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். 

இதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், மற்றும் ஷிகர் தவான் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். மயங்க் அகர்வால் 52 ரன்னுக்கு அவுட்டானார், ஷிகர் தவான் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 500 பவுண்டரிகள் அடித்து அசத்தி உள்ளார். 500 பவுண்டுகளை அடுத்த 5-ஆவது வீரர் ரோகித் சர்மா ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma completes 10000 runs in t20 match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->