ராமனுக்கு 14 வருடம்; விராட் கோலிக்கு 18 வருடம்: சாம்பியன் வென்ற ஆர்.சி.பி..!
RCB defeated Punjab to win the championship for the first time
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதியாட்டத்தில் பெங்களூரு அணி 06 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இன்று அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பல பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, படி பேட்டிங் செய்ய பெங்களூரு அணியின் சார்பில் சால்ட் 16 ரன்கள் எடுத்து இருந்த சால்ட், ஜேமிசன் பந்தில், ஸ்ரேயாசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்த போது, சகால் பந்துவீச்சில், அர்ஷ்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். விராட் கோஹ்லி 43 ரன்னில் உமர்சாய் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கேப்டன் ரஜத் பட்டிடர் 26 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் ஜேமிசன் பந்தில் எல்டிடபிள்யூ முறையில் அவுட்டானார்கள். ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்னில் வியாஷ்க் பந்தில் போல்டானார். ரொமாரியோ ஷெப்பர்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குர்ணால் பாண்ட்யா 04 ரன்களில் வெளியேறினார். இறுதியில் பெங்களூரு அணி, 20 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பாக அர்ஷ்தீ் சிங், ஜேமிசன் தலா 03 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இறுதியில் 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா, 24 ரன்களில் முதல் ஆட்டமிழந்தார். பிரப் சிம்ரன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யர் 01ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஸ் இங்லிஸ் 39 ரன்களில் அவுட்டானார்.

அடுத்தாக நேஹால் வதோரா 15 ரன்களிலும், மார்க்ஸ் ஸ்டோய்னிஷ் 6 ரன்களிலும், ஒமர் சாய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 06 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்துடன் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
English Summary
RCB defeated Punjab to win the championship for the first time