டெல்லி நீதிமன்ற சிறையில் பயங்கரம்: விசாரணைக்கைதிகள் சண்டை: கழுத்து நெரித்து கைது ஒருவர் கொலை..!
Arrested man strangled to death in fight between inmates in Delhi court jail
டில்லி மாவட்ட நீதிமன்ற சிறையில் விசாரணைக் கைதியான அமன் என்பவரை மற்ற இரண்டு கைதிகள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்யப்பட்ட கைதிக்கு கொலைசெய்த இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது வந்துள்ளது.
இந்த சமயம் குறித்து கூடுதல் துணை ஆணையர் (தெற்கு) சுமித் குமார் ஜா கூறியதாவது: இன்று காலை 10 மணியளவில், சாகேத் நீதிமன்றத்தில் இரண்டு முதல் மூன்று கைதிகளுக்கு இடையே சண்டை நடந்ததாகவும், அவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக கூறினார்.

அத்துடன், கோவிந்த்புரியைச் சேர்ந்த அமன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதைக் கபார்த்ததாகவும், அவர் ஜிதேந்தர் மற்றும் ஜெய்தேவ் ஆகியோருடன் சண்டையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்து விட்டதாக கூறினார். மேலும், இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறதாக சுமித் குமார் ஜா கூறினார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் அனில் பசோயா கூறுகையில், '2024-ஆம் ஆண்டில், அமன், ஜிதேந்தர் மற்றும் அவரது சகோதரரை கத்தியால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக மூன்று கைதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் அமன் உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவத்தில் ஆயுதம் எதுவும் இல்லை என்றும், இது கண்டிக்கத்தக்க சம்பவம் எனவும், இது நீதிமன்றம் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
English Summary
Arrested man strangled to death in fight between inmates in Delhi court jail