புரோ கபடி லீக்! நாளை பிளே ஆப் ஆட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் பிளே ஆப் சுற்றுகள் நாளை நடைபெற உள்ளன.

எட்டாவது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி போட்டிகளுக்கு பாட்னா, டெல்லி அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

ஜெய்ப்பூர் புனே அணிகள் மோதிய லீக் சுற்று ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே அணி முதல் பாதி முடிவில் 18-11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே அணி 34-26 என முன்னிலையில் இருந்த பொழுது, திடீரென எழுச்சி கண்ட ஜெய்ப்பூர் அணியினர் புனே அணியின் அனைத்து வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்தனர். ஆனாலும் இது ஜெய்ப்பூர் அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே அணி, ஆட்டநேர முடிவில் 37-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புனே அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றது. இதனுடன் பெங்களூரு, குஜராத், உத்திர பிரதேச அணிகளும் பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நடைபெறும் பிளே ஆப் சுற்றில் குஜராத் அணி பெங்களூரு அணியுடனும், புனே அணி உத்திர பிரதேச அணியுடனும் நேரடியாக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
23-ஆம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 25 -ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Kabbadi Play Off


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->