மும்பையில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதி.! அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நடைபெற உள்ள ஐபிஎல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு மும்பை வான்கடே மைதானத்தில், கொரோனா  கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில்,

"கொரோனா கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டியை நடத்த வேண்டும். பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 12 பேருக்கு நோய் கட்டுப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl in mumbai permission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->