இன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்  செய்ய களமிறங்கியது.

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் 26 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது.

ஒன் டவுன் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 32 பந்தில் 30 ரன்னும், பட்லர்9  ரன்னும், ஸ்மித்19  ரன்னும், ரியான் பராக் 20  ரன்னும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

ஐதராபாத் அணியில் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஹோல்டர், தான் வீசிய 4 ஓவர்களில், 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ஐதராபாத் அணி தற்போது  9 ஓவர்களில், 2  விக்கெட் இழப்புக்கு, 76 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஐதராபாத் அணி வெற்றிக்கு இன்னும் 79 ரன்கள் தேவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 match 40 srh vs rr


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->