இதற்கு மேல் வாய்ப்பு கிடைக்காது, காத்திருந்த இந்திய வீரர் திடீரென ஓய்வு அறிவிப்பு!
Indian Cricket Player Naman Ojha announce Retirement
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா அறிவித்துள்ளார்.
37 வயதான நமன் ஓஜா மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், அவர் இந்திய அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான நாமன் ஒஜா ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடினார். அதே தொடரில் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடினார்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அடுத்தகட்ட வீரர்கள் அனுப்பப்பட்ட போது, இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார்.
அந்த போட்டியை அவரின் அறிமுக மற்றும் கடைசி போட்டியாக அமைந்தது. அவர் சிறப்பாக விளையாடினாலும், அணியில் தோனி நிரந்தரமாக இடத்தை ஆக்கிரமித்து இருந்ததால் அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் நான் மாற்று ஆட்டக்காரராக இருக்க விரும்பவில்லை என தெரிவித்த அவர், ஓய்வு பெற்றுவிட்டு சர்வதேச அளவிலான 10 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
English Summary
Indian Cricket Player Naman Ojha announce Retirement