#INDvSA || ஆல்-அவுட் ஆகிய தென்னாபிரிக்கா அணி.! இந்திய அணியின் அசத்தல் பந்து வீச்சு.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதனையடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதேசமயத்தில் மறுமுனையில் மாலன் 1 ரன்னுக்கும், பவுமா 8 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறிது நேரம் நிலைத்து ஆடிய மரக்கரன் 15 ரன் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதே சமயத்தில் ரெஸ்ஸி உடன் கைகோர்த்த குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி செஞ்சுரியை பூர்த்தி செய்தார்.130 பந்துகளை சந்தித்த அவர் 124 ரன்களை (12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அவரை தொடர்ந்து ரெஸ்ஸி 52 ரன்களுக்கும், மில்லர் 39 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

49.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியும், ஒயிட் வாஷ் தோல்வியில் இருந்து தப்பிக்கலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa 3rd one day 1st innings


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->