இந்தியா பரிதாப தோல்வி! கேட்சுகளை விட்டு, கோட்டைவிட்ட இந்தியா! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 
மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவிற்கு, கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும், தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா விரைவாக வெளியேற, இந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு யாருமே எதிர்பாராத வேளையில் ஆல்-ரவுண்டரான சிவம் துபே முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.

இந்த முயற்சியானது பலன் அளிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் சிவம் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நிதானமாக விளையாட, பின்னர் சில பவுண்டரிகளை அடித்தார். அதற்கிடையே ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் சொதப்பலாக விளையாடி 8 பந்துகளை சந்தித்து 15 ரன்களுடன் கிளீன் போல்டாகி வெளியேறினார்.  அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

மறுமுனையில் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி அவரை அலறவிட்டார். அதோடில்லாமல் 27 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அடுத்த ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கதறவிட்ட இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்த போட்டியிலும் ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், கடந்த போட்டியில் நொறுக்கி எடுத்த வில்லியம்ஸின்பந்திலேயே அலட்சியமான சாட்டை விளையாடி இந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்து 19 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆனதும் யாரும் எதுவும் செய்யாதீர்கள், என வாயை மூடி ஒரு விரலை வாயில் வைத்து சைகை காட்டி கோலியை வெறுப்பேற்றினார் வில்லியம்ஸ். 

அதற்கடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆட்டத்திலும் ஜொலிக்காமல் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டானார். தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் ரிஷப் பாண்ட் இந்த ஆட்டத்தில் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

 வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த வில்லியம்ஸ் இந்த ஆட்டத்தில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வால்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், காட்ரோல் , பியர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். 

171 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் தீபக் சாகர் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சை சந்திக்க தடுமாறினாலும்,  வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களான லெண்டுல் சிம்மன்ஸ் லூயிஸ் இருவருக்கும் புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் கேட்சை கோட்டை விட இருவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்க, சிக்சிர்களாக பறக்க விட்டார்கள். 

லூயிஸ் கடந்த போட்டி போலவே இந்தப் போட்டியிலும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்து வெளியேற, அதற்கடுத்து வந்த ஹெட்மையர் 3 சிக்ஸர்களை விளாசிய நிலையில், விராட் கோலியின் அசத்தலான ஒரு கேட்சியில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த நிக்கோலஸ் பூரான் (38 ) தன் பங்கிற்கு 4  பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் விளாசினார்.  எதிர்முனையில் நின்றிருந்த லேன்டல் சிமொன்ஸ் அரை சதம் ( 67 ரன்கள்  4  பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும்) அடித்து அசத்தினார். இறுதிவர இறுதிவரை களத்தில் நின்ற இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை உறுதி செய்தனர். 

கடந்த போட்டியில்சிறப்பாக விளையாடிய இந்திய அணி பேட்டிங், இந்த போட்டியில் சொதப்பியது. இந்தியாவின் பவுலிங் மீண்டும் ஒரு பலவீனமாக இருப்பதை இந்த போட்டி உறுதி செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்த தொடரானது ஒன்றுக்கொன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் இறுதி மற்றும் கடைசி போட்டி 11ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India lost the match against west indies in Thiruvananthapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->