மைதானத்துக்கு முன் மனவேதனை...! - ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்...!
Heartbreak before stadium Rinku Singh father passes away
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் குடும்பத்தில் சோக செய்தி நிலவுகிறது. அவரது தந்தை கன்சந்த் சிங், நீண்ட காலமாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் உள்ள யதார்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த துயரச் செய்தி கிரிக்கெட் உலகையே பாதித்துள்ளது. ரிங்கு சிங்கின் தந்தை மறைவுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
வரும் மார்ச் 1-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்காக அவர் மீண்டும் அணியில் இணையவிருந்த நிலையில், குடும்ப சூழ்நிலையால் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் இருந்த அவர், தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அவசரமாக சொந்த ஊருக்கு திரும்பினார்.
பின்னர் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், தற்போது தந்தையின் மறைவுச் செய்தியை அடுத்து மீண்டும் அலிகார் சென்றுள்ளார்.இந்த சம்பவம், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Heartbreak before stadium Rinku Singh father passes away