ஜடேஜாவின் இறுதி நேர அதிரடியில் சென்னை வெற்றி! அசத்தலான துவக்கம் தந்த கொல்கத்தா பரிதாப தோல்வி!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் விளையாடாத கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் சுனில் நரைன் கிறிஸ் லின் இந்த போட்டியில் களமிறங்கினார்கள். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 7 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நிதிஷ் ராணாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் லின். நாலாபுறமும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தது.  திகைத்து போன தோனி, தாஹிரை அழைத்து பந்து வீச செய்தார்.  அதற்கு கைமேல் பலனாக முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணாவை  21 ரன்களில் காலி செய்தார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்திருந்தார். 

அதே ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ராபின் உத்தப்பா கோல்டன் டக்  ஆகி வெளியேறினார். அதன்பிறகு கார்த்திக் நிதானமாக நிற்க மறுபுறம் கிறிஸ் லின்  பவுண்டரிகளை விளாசினார். அவர் அரை சதம் அடித்த நிலையில் 51 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் 82 ரன்கள் எடுத்திருந்த போது தாஹீர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  இந்த தொடரின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் ஆண்ட்ரே ரசெல் 4  பந்து மட்டுமே சந்தித்த ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 10 ரன்களை எடுத்து அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் இறுதி ஓவர்களில் ரன்களை அதிகரிக்க அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியால் கார்த்திக் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக மிகவும் மந்தமாக விளையாடிய கொல்கத்தா  அணியின் ஸ்கோரை எதிர்பார்த்ததை விட குறைவாகவே நிறைவு செய்திருந்தது.  ஒரு கட்டத்தில் 200 ரன்கள்  வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அணியின் இறுதி நேர பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. 20 ஓவர் முடிந்த  நிலையில் கொல்கத்தா அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சென்னை அணியின் தரப்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும் , தாக்குர் 2 விக்கெட்டுகளையம் எடுத்தனர். 

162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. வாட்சன் 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ரெய்னா  பவுண்டரிகளை விளாச மறுமுனையில் டூ பிளசிஸ்  5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு வந்து 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு வந்த ஜாதவ் (20), தோனி (16) சிறிது நேரம் விளையாட சென்னை அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் தோனி ஆட்டமிழந்த சென்னை அணி வெற்றி பெறுமா என்ற நிலை உருவானது. தோனி ஆட்டமிழந்த நேரத்தில் 4 ஓவர்களில் 47 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. இறுதி நேரத்தில் ஜடேஜாவின் அதிரடி கைகொடுக்க 17 பந்துகளில் 31 ரன்களை அடித்து சென்னை அணியை வெற்றிபெற வைத்தார். இறுதிவரை சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடித்தார். 

கொல்கத்தா அணி தரப்பில் நரேன், சாவ்லா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. தோல்வியே கண்டாலும் கொல்கத்தா அணியே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai won the match against Kolkata


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->