50 ஓவர் கிரிக்கெட் முறையில் மாற்றம்? சச்சின் தகவல்.! - Seithipunal
Seithipunal


50 ஓவர் கிரிக்கெட் போட்டி இரு இன்னிங்சுகளாக பிரித்து விளையாட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

தற்போது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தலா 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்சுகளாகப் பிரித்து விளையாட வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற அணி, முதலில் 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை விளையாட தொடங்க வேண்டும் என்றும், அதன் பின் எதிரணி விளையாட வேண்டும் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். இதேபோலவே இரண்டாவது இன்னிங்சை விளையாட வேண்டும் என குறிப்பிட்ட அவர், முதல் ஐந்து ஓவர்களுக்கு கட்டாயம் பவர் பிளே அளிக்க வேண்டும் என யோசனை கூறியுள்ளார்.

இதன் மூலமாக 50 ஓவர் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள சச்சின், இதனால் விளம்பரதாரர்களும் மகிழ்ச்சி அடைவர்கள் எனத் தெரிவித்துதார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

changes in one match


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->