புத்திர பாக்கியத்திற்கு இப்பொருத்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.!
virurcha poruththma
விருட்சம் என்றால் மரம். இதில் 27 நட்சத்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாத மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர். பெண்ணின் நட்சத்திரமும் - ஆணின் நட்சத்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு. இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை.
பெண்ணின் அஸ்வினி நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் ரோகிணி நட்சத்திரம் பால் இருக்கும் வகை எனவே பொருத்தமில்லை. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது. ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.
27 நட்சத்திரத்திற்குரிய விருட்சம் :
அஸ்வினி - எட்டி, பரணி - நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசீரிடம் - கருங்காலி, திருவாதிரை - செங்கருங்காலி, புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆலமரம், பூரம் - பலா, உத்திரம் - அலரி, அஸ்தம் - வேலம், சித்திரை - வில்வம், சுவாதி - மருதம், விசாகம் - விளா, அனுஷம் - மகிழம், கேட்டை - பிராய், மூலம் - மாமரம், பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பலா, திருவோணம் - எருக்கு, அவிட்டம் - வன்னி, சதயம் - கடம்பு, பூரட்டாதி - தேமா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை.
பால் இருப்பது :
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆலமரம்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி - இலுப்பை
பால் இல்லாதது :
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிடம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு ஆகிய கிரகங்களை ஆராய்ந்து பார்க்கப்படும்.
ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை அவரது பிறந்த நட்சத்திர நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படி செய்தால் மரக்கன்று வளர வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும். அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும். அவரது கர்மவினைகளை நீக்கும் தன்மை கொண்டது.