புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் : நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம்! - Seithipunal
Seithipunal



தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். 

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இன்று, கடைசி ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் மாவிளக்கு எட்டு நெய் தீபம் ஏற்றி தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

punnai nallur marriyamman temple


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->