கேரளாவில் பரபரப்பு! தங்கம் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்த சுங்கத்துறை ஆய்வாளர் பணி நீக்கம்...!
There stir Kerala Customs inspector who helped gold smugglers dismissed
சர்வதேச விமான நிலையங்கள்,கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் இருக்கிறது.இதன் வழியாக தங்கம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு சுங்கத்துறை ஆய்வாளரான ''அனீஷ்'' உதவி செய்தது தெரியவந்தது. தற்போது கடத்தல்காரர்களுக்கு கடத்தல் செய்ய உதவி செய்ததன் காரணமாக சுங்கத்துறை ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
There stir Kerala Customs inspector who helped gold smugglers dismissed