முருகனின் அறுபடை வீடுகளும்.. அவற்றின் வரலாறும்..! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. அவை உருவான விதம் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் தற்போது பார்போம்.

பழநி:  ஞானப்பழம் கிடைக்காததால் முருகன் பெற்றோரிடம் கோபம் கொண்டு ஆண்டி கோலத்தில் நின்ற இடம் தான் பழனி. இங்குள்ள முருகன் சிலை போகரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதால் செய்யப்பட்டது. அங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை உட்கொண்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

திருப்பரங்குன்றம்: தேவர்களை சிறை மீட்டதற்க்கு நன்றி கடனாக இந்திரன் தனது மகள் தெய்வானையை மணம் செய்து கொடுக்க முடிவு செய்து இருவருக்கும் மணம் நடைபெற்ற இடம் திருப்பரங்குன்றம் என கூறப்படுகிறது.

திருச்செந்தூர்: முருகன் சூரபத்மன் என்னும் அசுரனுடன்  போரிட்டு வதம் செய்த இடம் திருச்செந்தூர். இந்த இடம் முதலில் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள திருத்தலம் இது என்பது குறிப்பிடதக்கது.

சுவாமிமலை: அறுபடை வீடுகளில் நான்காம் வீடாக திகழ்வது சுவாமி மலை. பிரணவமந்திரத்தின் பொருளை சிவ பெருமானுக்கு முருகன் உபதேசித்த இடம் சுவாமி மலை ஆகும். இந்த கோவில் திருவேரகம்  எனவும் அழைக்கப்படுகிறார்.

திருத்தணி: அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக இருக்கிறது திருத்தணி ஆகும். வள்ளியை மீது காதல் கொண்டார். ஆனால் வள்ளியின் தந்தை மணம் செய்து கொடுக்க மறுக்கவே அவரை போரில் வென்று போர்கோலத்திலேயே வள்ளியை மணமுடித்த தலம் திருத்தணி ஆகும்.

பழமுதிர்ச்சோலை: அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக திகழ்வது பழமுதிர்ச்சோலை. இந்த தலம் அருணகிரிநாதரால் பாடபெற்ற தலமாகும். வள்ளியை திருமணம் செய்ய முருகனுக்கு விநாயகர் உதவ வந்த இடமாக பழமுதிர்சோளை இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murugan arupadai Veedu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->