இன்றைய நாளை வெற்றிகரமாக்க... இன்றைய தினப்பலன்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடு தொடர்பான பயணங்கள் கைகூடும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்:

உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் செயல்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கவலைகள் குறையும் நாள்.

மிதுனம்:

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். திட்டமிட்ட பணிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். செல்வாக்கான நாள்.

கடகம்:

குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் புதிய நம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

சிம்மம்:

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.

துலாம்:

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டித் தேர்வுகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

விருச்சிகம்:

வியாபாரம் நிமிர்த்தமான கடனுதவிகள் கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் புரிதலும், லாபமும் ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.

தனுசு:

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்:

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்:

வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதரவும், நம்பிக்கையும் அதிகரிக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 12 rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->