குலதெய்வம் அருள் பெற்று, குலம் தழைக்க செய்யும் காமாட்சி விளக்கு.! - Seithipunal
Seithipunal


குலதெய்வ அருள் பெற்று, குலம் தழைக்க செய்யும் காமாட்சி விளக்கு:

விளக்குகளிலேயே மிக புனிதமானதாக கருதப்படுவது காமாட்சி விளக்கு. தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த போது, சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது.

காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கும் போது காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

அனைத்து தெய்வங்களின் அருளையும் ஒன்றாக பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் புதுமண தம்பதிகள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வளம் வருவதும், மணப்பெண்ணை புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கான காரணமாகும்.

மேலும், குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் குல தெய்வம் அருள் பெற்று, அந்த குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KULAM THAZHAIKKA VEETIL KAMATCHI VILAKKU ETRUNGAL


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->