அத்திவரதர் காண வரும் பக்தர்களுக்காக அரசு செய்த நடவடிக்கைகள்., ஆட்சியர் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 22வது நாளான இன்று மதிய நிலவரப்படி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வரிசையில் நின்று காத்து கிடக்கின்றனர். 

கோவில் அருகே ஏற்கனவே 250 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகளுக்காக கூடுதலாக  150 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார் அதுபோல் குடிநீர் வழங்குதல் புதியவர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை ஏற்கனவே 500 பேர் இருந்த நிலையில் தற்போது 2000 பேர் பணியில் உள்ளனர். கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகள், கார்கள் அனுமதிக்கப்படாமல் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நேற்று விடுமுறையை தினம் என்பதால் கூட்டம் மேலும் அதிகரிகத்து ஒரு நாள் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில் நடந்து முடிந்த 22 நாட்களில் மொத்தம் 33 லட்சத்து மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும்வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார் அப்போது அவர் பேசியதாவது, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை குப்பைகள் சுத்தம் செய்யப்படுவாதாகவும், பக்தர்களுக்கு கூடுதலாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், மேலும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தரிசனத்துக்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், மோர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

collector says about athivarthar temple


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->