கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்..கடைசியில் நடந்தது என்ன?
What happened at the end of the romance with the college girl?
வாடகை வீடு எடுத்து உல்லாசமாக இருந்த இளம்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐசிஎப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 நாட்களுக்குமுன்பு19 வயதான இளம்ஜோடி ஒன்று திருமணமாகி விட்டதாக கூறி சென்னை ஐசிஎப் ராஜீவ் காந்தி நகரில் வாடகைக்கு குடி வந்துள்ளனர். ரூ. 4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியிருத்த நிலையில் நேற்று இரவு வாலிபர் தூக்கில் தொங்கியநிலையில் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஐசிஎப் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டநிலையில், அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இருவரின் உடலையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போலீசார் விசாரணையில் இருவரும் கல்லூரி மாணவர்-மாணவி என்பது தெரியவந்தது. அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வீடு வாடகை எடுத்து கணவன் - மனைவி போல இருவரும் இரவிலும் பகலிலும் உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவும் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்பட்ட போது காதலி அபிநயாவை ஆகேஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளம்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐசிஎப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
What happened at the end of the romance with the college girl?