சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!
The Madurai bench of the High Court has ordered that no fee should be collected from the local people going to the Sorimuthu Ayyanar temple
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது" என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்' என்ற பெயரில் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள இந்த பகுதியின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளதால் அங்குள்ள
பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.மேலும் வனத்துறை அலுவலர்கள் இணைந்து பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:" சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவால் அம்பாசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
The Madurai bench of the High Court has ordered that no fee should be collected from the local people going to the Sorimuthu Ayyanar temple