ஐபிஎல் இறுதிப்போட்டி தொடங்கியது! பஞ்சாப் அணி பந்து வீச்சு! - Seithipunal
Seithipunal


ஐபிஎல்  18-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரைச் கடந்த மார்ச் 22-இல் தொடங்கியது. 10 அணிகள் போட்டியிட்ட இந்த தொடரில், லீக் மற்றும் பிளே-ஆப் சுற்றுகள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

தொடருக்கான பரபரப்பான இறுதிப் போட்டி இன்று (ஜூன் 3) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டத்துடன், இரு அணிகளும் தங்கள் முதல் ஐபிஎல் கோப்பை வெல்ல ஆவலுடன் களமிறங்குகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆளுமைகள் மற்றும் RCB-வின் சக்திவாய்ந்த துவக்க வீரர்கள் மோதும் இந்தப் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இரு அணிகளுமே இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றைய போட்டி ஒரு புதிய சாம்பியனை உருவாக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 Royal Challengers Bengaluru Punjab Kings


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->