ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!
Contract to produce metro trains that operate without a driver
ரூ. 1,538.35 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது. மேலும் இதற்கான ஏற்பு கடிதம்28.04.2025 அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்று மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, பயிற்சி, மெட்ரோ ரெயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும் என்றும் மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது..
இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ. ஆர். ராஜேந்திரன்,இணை பொது மேலாளர் பி. தியாகராஜன் , சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.இவ்வாறு மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Contract to produce metro trains that operate without a driver