டெல்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 71 வெளிநாட்டினர் நாடு கடத்தல்..! - Seithipunal
Seithipunal


டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். டில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடியேறிய சிலர் அங்கு வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினார் 71 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரியின் முடிவில் அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வங்கதேசத்தினர் 41 பேர், மியான்மரின் ரோஹிங்கியர்கள் 17 பேர், நைஜீரியா நாட்டினர் 13 பேர் ஆவர். குறித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் கஸ்டடியில் இருந்தனர்.

தற்போது அவர்கள் தங்களது நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாக்கள் இல்லாமல் அல்லது சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

71 illegal immigrants deported in Delhi


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->