'05 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடினு சுருட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போக நாங்க வரல, எங்களின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது': தவெக புஸ்ஸி ஆனந்த்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியாதவது: 

இளைஞர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எல்லோரையும் பார்த்துவிட்டீர்கள். இந்த முறை ஒரே ஒரு வாய்ப்பு கொடு என்று தான் கேட்பார்கள். 32 ஆண்டுகளாக விஜய் உச்சத்தில் இருக்கிறார். அந்த உச்சத்தை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். அந்த உச்சத்தில் இருக்கும்போதே மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். ரிட்டையர்மென்ட் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், இன்னும் 15 ஆண்டுகளுக்கு விஜய் மட்டுமே உச்சத்தில் இருப்பார். இருந்தாலும், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னை உச்சத்தில் உட்கார வைத்த மக்களுக்காக நான் நல்லது என்னவென என்று வந்துள்ளார். தலைவர் எங்களை நல்லவிதமாக ஒழுக்கத்துடன் வளர்த்துக் கொண்டிருப்பதால், அதன்படி தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 35 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இப்போது மட்டும் செய்யவில்லை. கொரோனா காலகட்டங்களில் யார் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் பதுங்கி விட்டார்கள். எல்லோருக்கும் உயிரின் மேல் பயம். ஆனால், எங்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒவ்வொரு தோழரும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ரத்த தானம் முதற்கொண்டு செய்து வந்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பணத்திற்கு மேல் எங்களுக்கு எந்தவொரு ஆசையும் இல்லை. தலைவர் விஜய் அவர்கள் 2026-இல் அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதும், ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் எல்லோரது எண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 05 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி அடிச்சுகிட்டு ஜெயிலுக்குப் போக நாங்கள் வரவில்லை. எங்களுக்கு காலையில் ஒரு 05 இட்லி, மதியம் கொஞ்சம் சாதம், இரவு ஒரு 05 இட்லி இருந்தாலே அது எங்களுக்கு போதும். எவ்வளவோ ஏழை மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are not here to go to jail after collecting Rs 5000 crore or Rs 10000 crore our aim is to serve the people says Pussy Anand


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->