திக்கி திணறும் பெங்களூரு: விராட் கோலி மீது புகார் அளித்துள்ள சமூக ஆர்வலர்; போலீசார் பரபரப்பு பதில்..!
Social activist files complaint against Virat Kohli in incident that left 11 dead
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆர்சிபி அணியின் சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நபர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
பெங்களூர் சிவமொக்காவை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கப்பன்பார்க் போலீசில் நேற்று இந்த புகாரை அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட கப்பன் பார்க் போலீசார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த புகாரையும் சேர்த்து விசாரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக ஐபிஎல் 2025 சாம்பியனுக்கான மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் நிகில் சோசலியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்பட சில முக்கிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உளவுத்துறை பிரிவின் தலைவராக செயல்பட்ட ஹேமந்த் நிம்பால்கர் பணி இடமாற்றம் பெற்றுள்ளார்.
இந்த சம்பவத்தால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் பெங்களூரு அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீதும் தற்போது புகாரளிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Social activist files complaint against Virat Kohli in incident that left 11 dead