ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: சர்ச்சையாக பேசிய குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலர் கைது..!
Gujarat Congress general secretary arrested for controversial remarks on Operation Sindoor
குஜராத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜேஷ் சோனி, ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் போலீராசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் போது நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியது. அதனை தொடர்ந்து 3 நாட்கள் நீடித்த போர் பதற்றம் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல கேள்விகளையும், ஆதாரங்களையும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் ராஜேஷ் சோனி, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து சர்ச்சைக்குரிய வகையில், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறி போலீசாரை அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து, போலீஸ் எஸ்.பி., பாரத் சின்ஹ் கூறுகையில், ராஜேஷின் கருத்து மக்களை தவறாக வழி நடத்துவதுடன், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாதுகாப்பு படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார் என்று போலீஸ் எஸ்.பி., பாரத் சின்ஹ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட ராஜேஷ் சோனி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152, 353(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Gujarat Congress general secretary arrested for controversial remarks on Operation Sindoor