லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருவர் லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் குரியன். அவரது மகள் 25 வயதுடைய ஐரின் எல்சா. கோட்டயம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார். ஆனால் யாருக்கும் வேலைக்கான விசா கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோட்டயம் காஞ்சியார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஒருவர், ஐரின் எல்சாவிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்துள்ளதாக  கட்டப்பனை போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் ஐரின் எல்சாவை கைது செய்து விசாரித்ததுள்ளனர். அதில் குறித்த பெண் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, கோட்டயம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman arrested in Kerala for cheating people of several lakhs on the pretext of getting them a job in London


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->