வருகிறது சந்திர கிரகணம்.. இந்த நட்சத்திரகாரர்கள் கவனம்! செய்ய வேண்டிய பரிகாரம்!
Chandra kirakanam parikaram
2025ஆம் ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தினமணி இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார். ஜோதிடக் கணிப்பின்படி ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன்-சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும்; அதேபோல் சந்திரன் சூரியனின் எதிர்கோட்டில் பயணித்து ராகு அல்லது கேதுவைத் தொடும் தருணத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த கிரகணம் ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22ஆம் தேதி (07.09.2025) பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.56 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது. இதில் முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணிக்கு ஆரம்பித்து, 11.41 மணிக்கு உச்சம் அடைந்து, 12.23 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த கிரகணம் இந்தியாவிலேயே தெளிவாகக் காணக்கூடியதால், கிரகண தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்வது நல்லது எனவும் கூறப்படுகிறது.
இதனால், 2025 செப்டம்பர் 7ஆம் தேதி இரவு வானில் நிகழும் இந்த அரிய முழு சந்திர கிரகணத்தை மக்கள் நேரடியாகக் காணலாம். ஜோதிட ரீதியாகக் கருதினால், பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் தகுந்த பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
English Summary
Chandra kirakanam parikaram