இன்றைய தினம் சிறப்பான பலன்களை பெறப்போவது யார்.? இன்றைய (29-09-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

எதிர்பாராத சில புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் பயணங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்

சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். பணிவு நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

கடகம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், சோர்வும் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் பெற்றோர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

கன்னி

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். விருத்தி நிறைந்த நாள்.

துலாம்

மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வேலை மாற்றம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

தனுசு

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தடைகள் விலகும் நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

மீனம்

அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->