இன்றைய ராசிபலன்.. இந்த ராசிக்காரர்களுக்கு தான் பரிசும்... பாராட்டும்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்:

காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்:

வாழ்க்கை துணையின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

கடகம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்:

சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வியாபார பணிகளில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும். புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவும், மாற்றமும் ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.

துலாம்:

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய துறை சார்ந்த பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பணிகளில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். சாதகமான நாள்.

தனுசு:

மனை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

மகரம்:

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். அரசு அதிகாரிகளின் மூலம் மாற்றம் பிறக்கும். புதுமை நிறைந்த நாள்.

கும்பம்:

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் புதுமையான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

மீனம்:

மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிலில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 may rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->