இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள்.. இன்றைய (21-05-2022) ராசி பலன்கள்! - Seithipunal
Seithipunal


மேஷம்

மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான இடமாற்றம் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மறைமுக தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரம் ரீதியான புதிய முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. கவனம் வேண்டிய நாள்.

கடகம்

கூட்டாளிகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சிந்தனைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தடைகள் குறையும் நாள்.

கன்னி

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.

துலாம்

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

தனுசு

எதிர்பாராத தனவரவு உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

மீனம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->