இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது.? - Seithipunal
Seithipunal


மேஷம்

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அசதிகள் நீங்கும் நாள்.

மிதுனம்

எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் பொருள் வரவு உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவி சாதகமான பலன்களை உருவாக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அபிவிருத்தியான நாள்.

சிம்மம்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார ரீதியான  பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். எந்தவொரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். மனைவி வழி உறவினர்களின் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

துலாம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்காக திடீர் சுப செலவுகள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தடைகள் நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். மாணவர்கள் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். இழுபறியான பணிகள் முடிவதற்கான சூழ்நிலைகள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.

மகரம்

வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

கும்பம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத புதிய பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எண்ணங்கள் ஈடேறும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பு மேம்படும் நாள். 

மீனம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10.04.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->