அற்புதமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? இன்றைய ராசிப்பலன்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பொறுப்புகள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.

ரிஷபம்:

நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மிதுனம்:

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.

கடகம்:

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.

சிம்மம்:

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி:

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.

துலாம்:

வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.

விருச்சிகம்:

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.

தனுசு:

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்:

வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

மீனம்:


நண்பர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 feb rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->