தினம் தினம் திருநாளே... இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மைகள் நிறைந்த நாள்.

ரிஷபம்:

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். வியாபார பணிகளில் சில வியூகங்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

மிதுனம்:

உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சோர்வு நிறைந்த நாள்.

கடகம்:

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி:

சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவை பெறுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம்:

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புரிதல் உண்டாகும் நாள்.

விருச்சிகம்:

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் குறையும். வரவுகள் மேம்படும் நாள்.

தனுசு:

உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் கைகூடும். அறிமுகம் நிறைந்த நாள்.

மகரம்:

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சபை தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு மேம்படும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். மதிப்பு மேம்படும் நாள்.

கும்பம்:

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் உள்ள மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நிதானம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->