இன்றைய தினம் யாருக்கு வெற்றி.? யாருக்கு லாபம்.? இன்றைய (04-03-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

ரிஷபம்:

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம்:

எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்:

செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.

சிம்மம்:

உத்தியோக பணிகளில் சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கனிவு நிறைந்த நாள்.

கன்னி:

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தவறிய சில பொருட்களை பற்றிய தகவல் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்:

எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் நுட்பமான ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான திட்டங்கள் அதிகரிக்கும். திருப்திகரமான நாள்.

தனுசு:

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தனவரவில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் மேம்படும். வரவு மேம்படும் நாள்.

மகரம்:

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  வியாபார பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.  குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபகரமான நாள்.

கும்பம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவர்களின் அறிமுகத்தின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  தெளிவு பிறக்கும் நாள்.

மீனம்:

மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. உத்தியோக பணிகளில் சில விவாதங்களின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். எதிர்பாராத தனவரவு காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04 mar rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->