ஒரே நேரத்தில் ஐ லவ் யூ - டூ., போட்ட இளம்பெண்.! திருமணம் முடிந்த மறுநாளே சம்பவம்.!
Gujarat Love And marriage murder case
திருமணமான மறுநாளே தனது புதுமனைவியின் காதலனால் கணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கமலேஷ் சாவ்டா என்பவர், கோமல் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால், அவரின் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 15 ஆம் தேதி கோமலை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஆனால், கோமல், கமலேஷ் சாவ்டாமட்டுமல்லாமல் யஷ்வந்த் என்ற நபரையும் காதலித்து, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கோமலுக்கு திருமணம் நடந்தது குறித்து அறிந்த யஷ்வந்த், நேற்று (ஆகஸ்ட் 16ம் தேதி) வீட்டுக்குச் சென்று, கமலேஷ் சாவ்டாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்" என்று போலீசார் தெரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலையான நபரின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், யஷ்வந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Gujarat Love And marriage murder case