ஓ.பி.எஸ்ஸுக்கு ஐடியா கொடுக்கும்.. முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


ஈபிஎஸ் ஆதரவாளர் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஓபிஎஸ் வேண்டுமானால் புதிய கட்சி ஒன்றை துவங்கட்டும் என்று கூறி அதற்கு பெயரையும் வைத்துள்ளனர். 

சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அமைச்சர் பதவியில் இருந்து ரவீந்திரநாத் தடுக்கப்பட்டதாகவும், ஆனால், அவரை யாரும் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ரவீந்திரநாத் தொடர்ந்து திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

கட்சி ஏற்கனவே சுறுசுறுப்பாக இயங்கி வருவதால், தனிக்கட்சி எங்களுக்கு தேவையில்லை. ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற ஒன்றை புதிதாக ஆரம்பித்து தனது மக்கள் பலத்தை காட்டட்டும். ஏற்கனவே, நால்வர் சேர்ந்த அணி மாதிரி, அதிமுகவின் போட்டி அணிகள் காணாமல் போனது போல் இந்த அணியும் காணாமல் போய்விடும். 

கட்சி சார்பில் ஓபிஎஸ்க்கு ஒருவர் நோட்டீஸ் அனுப்பவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சிக்காரர்கள் யாரும் உண்மையில் நீக்கவில்லை. பொதுச் சபையால் அவர் நீக்கப்பட்டார். பொதுக்குழு அவரை நீக்கும் போது அவர் கட்சிக்கு எப்படி சம்பந்தப்படுவார்? அவர் எப்படி கட்சியின் கொடியை பயன்படுத்த முடியும்?

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். கட்சிகளின் வாக்குப் பங்கிற்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கப்படும். கட்சிகளுக்கு நாங்கள் கொடுப்பது மட்டும் தான் சீட் என்று இதை விட வேற யாரும் இவ்வளவு உறுதியாகச் சொல்லமாட்டார்கள் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will give idea Ex Minister jeyakumar to OPS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->