வஞ்சகம்! சிலர்மீது மட்டும் வழக்கு, விஜய் மீது ஏன் இல்லை? - திருமாவளவன் கேள்வி
Why only some people being sued not Vijay Thirumavalavan questions
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. ஆனால் பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்தால், தலைவரான விஜய் மீதும் ஏன் வழக்கு இல்லை? காவலர்கள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்” என்றார்.

மேலும்,திமுக கூட்டணியில் உள்ள போதும் கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “இது அரசுக்கு எதிரான விமர்சனமல்ல. பெரிய சம்பவம் நடந்த நிலையில் சிலர்மீது மட்டும் வழக்கு பதிவு செய்வது நியாயமில்லை” என்றார்.“கரூர் சம்பவம் விஜய்க்கு மட்டுமல்ல, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பாடமாகும். மக்களை கூட்டி வருபவர்கள், அவர்களை பாதுகாப்பாக அனுப்பும் பொறுப்பு அவர்களுக்கே உண்டு”என்று தெரிவித்தார்.
English Summary
Why only some people being sued not Vijay Thirumavalavan questions