அடடே! வருடாந்திர தொழில் உச்சி மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
What did Rajnath Singh say annual industry summit
டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி 'ராஜ்நாத் சிங்', இன்று நடந்த வருடாந்திர தொழில் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது," நம்முடைய நாட்டின் பாதுகாப்பில் மேக்-இன்-இந்தியா அத்தியாவசியம் வாய்ந்த ஒரு விசயம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் திறமையான நடவடிக்கையில் அது ஒரு முக்கிய பங்காற்றியது.

ஏ.எம்.சி.ஏ. திட்டத்தின் செயல்மாதிரி வழியே, உள்நாட்டு பாதுகாப்பு திறனை இன்னும் மேம்படுத்துவதில், பொது துறை நிறுவனங்களுடன் முதன்முறையாக தனியார் துறையினரும் இணைந்து, ஒரு பெரிய பாதுகாப்பு திட்டப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.இந்த செயல்மாதிரியின் வழியே, இந்தியாவில் 5-ம் தலைமுறை போர் விமானங்களை கட்டமைக்கும் இந்த ஏ.எம்.சி.ஏ. திட்டம் ஆனது ஒரு துணிச்சலான மற்றும் உறுதியான நடவடிக்கையாக அமையும்.
அது உள்நாட்டு வான்வெளி துறையை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றிற்கு மேக்-இன்-இந்தியா திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. உள்நாட்டு சாதனங்களின் உதவியால், பயங்கரவாத பதுங்கு குழிகளையும், ராணுவ தளங்களையும் நாம் அழித்தோம்.
நாம் இன்னும் நிறைய செய்திருக்க முடியும். ஆனால், ஒருங்கிணைப்புக்கான சக்தி மற்றும் கட்டுப்பாட்டு ஆகியவற்றிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக நாம் செயல்பட்டோம்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. நிலப்பகுதி மற்றும் அரசியல் ரீதியாக அந்த மக்கள் பிரிந்திருந்தபோதும், விரைவிலோ அல்லது பின்னரோ, அவர்களாகவே விரும்பி இந்தியாவுக்கு திரும்புவார்கள்.
அவர்கள், இந்தியாவுடன் ஆழ்ந்ததொரு பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு பலர் கரகோஷங்கள் எழுப்பி தங்களது ஆதரவுகளைத் தெரிவித்தனர்.
English Summary
What did Rajnath Singh say annual industry summit